Saturday 15 May 2010

பிரின்சு என் ஆர் சமா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

2007இல் இந்தியா 20-20 உலகப்கோப்பை வென்ற பொழுது அய்யா பிரின்சு எழுதிய பதிவு இங்கே.

அவரு என்ன சொல்றாருன்னா, அணித் தலைவர் தோனி பார்ப்பனர் இல்லையாம் அதனால தான் இந்தியாவால கோப்பை ஜெயிக்க முடிஞ்சதாம். அய்யா ஒரு அணி ஜெயிக்கிறதுக்கும் தோக்குறதுக்கும் ஜாதி காரணம் இல்ல, திறமை தான் காரணம் - அது பார்பனரா இருந்தாலும் சரி வேறு யாரா இருந்தாலும் சரின்னு சொல்லிப் பார்த்தேன். எனக்கு அறிவு இல்ல, தெளிவா சொல்லிக் கொடுக்குறேன்னு சொன்னாரு...இது வரைக்கும் சொல்லல.

போன வருசம் இந்தியா தோத்ததும் அதே பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டு நியாபகப்படுத்தினேன். அத வெளியிடக் கூட முடியல நம்ம அய்யாவுக்கு. அதனால இங்கேயே கேக்குறேன் -

கடைசி ரெண்டு தடவையும் இந்தியாவினால செமி-பைனல் கூட போக முடியலையே, இப்போ என்ன அணித் தலைவர் தோனி பூனூல் போட ஆரம்பிச்சிட்டாரா என்ன?

அந்த வருசம் போப் மண்டையப் போட்டாரு அடுத்த வருசம் இந்தியா கோப்பை ஜெயிச்சதுன்னு சொல்லுறது மடத்தனம் தான் ஒத்துகிறேன். உங்க மடத்தனம் இப்போ உங்களுக்கு புரியுதா?

Saturday 3 April 2010

தமிழ் துரோகி முத்தையா முரளிதரன்.

கோவை சவுண்டு பார்ட்டி எல்லாம் முரளிக்கு சப்போர்ட்டு! அப்போ என்னை நம்பலை. இப்போ தெரியுதா?இவன் இந்தியத் துரோகி என்றால் எனக்கு கும்மி விழும். ஆனால் இவன் தமிழ் துரோகியாகவும் இருப்பது இப்பொழுது தெரியுதா?
யோசித்துப் பாருங்கள் - இன்றைய இராஜஸ்தனுக்கு எதிரான போட்டியில் நாலு ஓவரில் 52 ரன்கள். இந்தியாவிற்கு ஆகாத ஆஸியை சேர்ந்த போலிஞ்கர் சென்னை ஜெயிக்க வேண்டும் என்று விளையாடும் போது, தன்னால் முடிந்த வரையும் சென்னை தோற்க வேண்டும் என்ற ஆசை முரளிக்கு. இல்லா விட்டால் பஞ்சாபிற்க்கு எதிரான சூப்பர் ஓவரில் முதல் பந்தில் 6 ஓட்டங்கள் விட்டுத் தந்திருப்பாரா? அதிலும் யாருக்கு? மகிலே ஜெயவர்தனேவிற்க்கு!!! ஆம், இலங்கை அணியில் ஆடும் அதே மகிலே தான்!